திங்கள், 27 பிப்ரவரி, 2012

நடப்பு செய்திகள்


டிஸ்மிஸ்

டாஸ்மாக் மேலாளராக நியமிக்கப்பட்ட எம்பிஏ பட்டதாரிகள் 6 பேர் அதிரடியாக டிஸ்மிஸ்செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 6 ஆயிரத்து 600 டாஸ்மாக் கடைகளில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கடை, பார் சூபர்வைசர், விற்பனையாளர்கள், பார் உதவியாளர்கள் என 35 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். முதலில் துணை கலெக்டர் அந்தஸ்தில் மாவட்ட மேலாளர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் 2004ம் ஆண்டில் எம்பிஏ பட்டதாரிகள் 32 பேர் தேர்வு செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் மேலாளராக பணிய மர்த்தப்பட்டனர்.

தொடர்ந்து 32 எம்பிஏ பட்டதாரிகள் மேலாளராக பணியாற்றி வந்த நிலையில் 2006ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின்போது டாஸ்மாக்கில் மேலாளராக இருந்த அவர்கள் முறையாக நியமனம் செய்யப் படவில்லை என்று கூறி 32 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து மீண்டும் துணை கலெக்டர்கள் அந்தஸ்தில் உள்ளவர்கள் மாவட்ட மேலாளர் பணியை கவனித்து வந்தனர். இந்நிலையில் மீண்டும் 2011ல் அதிமுக ஆட்சி ஏற்பட்டவுடன் கடந்த டிசம்பர் மாத கடைசியில் முதல்வர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட எம்பிஏ பட்டதாரிகள் 32 பேருக்கும் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

இதில் முதல்கட்டமாக 16 பேர் பணி அமர்த்தப்பட்டனர். மீதமுள்ள 16 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் இரண்டு மாதங்களாக பணியாற்றி வந்த 16 பேரில் 6 பேரை திடீரென டாஸ்மாக் மாநில நிர்வாக இயக்குனர் சவுண்டையா பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதில் சென்னை வடக்கு மாவட்ட மேலாளர் மாரிமுத்து, தெற்கு மாவட்ட மேலாளர் புஷ்பலதா, நீலகிரி மாவட்ட மேலாளர் செங்கிஸ்கான், கரூர் பாலமுருகன், கன்னியாகுமரி மனோகர், புதுகோட்டை ரவிச்சந்திரன் ஆகியோர் அடங்குவர்.
டாஸ்மாக் தே.மு.தி..நிர்வாகக்குழு கூட்டம் டாஸ்மாக் தே.மு.தி. நிர்வாகிகளின் கூட்டம் அதன் அலுவலகம் மாப்பாளையத்தில்26.02.2012 அன்று மாலை 4 மணிக்கு நடைப்பெற்றது.கூட்டத்திற்கு மதுரை
மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையேற்க மாவட்ட செயலாளர் சையது முகம்மது சுலைமான் கிழ்கண்ட திர்மானங்களை கொண்டுவந்து நிர்வாகிகளால் நிறைவேற்றப்பட்டது.தற்பொழுது கடைகளில் மேற்பார்வையாளர்கள் தேவைப்பட்டியல் வழங்காமலேயே சரக்குகளை குவித்து வருவதையும் ,கடைகளில் நின்று வியாபாரம் செய்ய இடமின்றி சரக்குகளை இறக்குவதையும் கண்டித்தும்,விற்பனை குறைவிற்கு சரக்குபோடும் அதிகாரிகளே முழு பொறுப்பேற்கவும்,மதுபான கிட்டங்கிகள் மற்றும்போக்குவரத்தில் ஏற்படும் பாட்டில் குறைபாடு தவறுகளை உடன் களையவும்,கடையின் மின்சார கட்டணம் முழுவதையும் நிர்வாகமே செலுத்த வேண்டும் எனவும், பார்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துகளில் தனியார்களின் ஆதிக்கத்தை குறைத்து அரசே ஏற்றுநடத்தவும்,முறையற்ற பகுதி மேற்பார்வையாளர் நியமனத்தினை உடன் ரத்து செய்யவும், கூடுதல் விற்பனையில் அப்பாவி விற்பானையாளர்கள்,மேற்பார்வையாளர்கள் மட்டும் பாதிக்கப்படும் பொழுது அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும்,
பணிநிரந்தரம், மத்தியமாநில அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம்,பணிபாதுகாப்புபோன்றவைகளை தேர்தல் முன்பு வாக்களித்தப்படி நிறைவேற்ற வேண்டியும் திர்மானங்கள் நிறைவேற்ற பட்டது.இக் கூட்டத்தில் சுரேஸ்,கோபால்சாமி,பூமிநாதன்,அழகு முத்துராமலிங்கம்,மணிகண்டன்,நாகராஜ்,பூங்கொடிஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.சங்க பொருளாளர் பாலகிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார்.இச்செய்தியினை டாஸ்மாக் தே.மு.தி. சங்க கொள்கை பரப்புசெயலாளர் டபிள்யூ. ஷாஜஹான் கூறினார்.

சனி, 25 பிப்ரவரி, 2012

நடப்பு செய்திகள்


நடப்பு செய்திகள்



விருதுநகர், பிப். 23-

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று இரவு பீகாரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 26), சஞ்சய் (26) ஆகிய 2 பேர் மது வாங்க வந்தனர்.

அவர்கள் இருவரும் மதுக்கடையில் ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்தனர். அந்த ஆயிரம் ரூபாய் நோட்டு கள்ளநோட்டாக இருந்ததை பார்த்து மதுக்கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவர்கள் சாத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து வந்து பீகார் வாலிபர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் மேலும் ஒரு ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கள்ளநோட்டு எப்படி கிடைத்தது என்று அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





அருப்புக்கோட்டை

 1 1



அருப்புக்கோட்டை அருகே உள்ள வீரசோழனில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்(வயது 44) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் இங்கு நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன், மருதுபாண்டி, செந்தில், செல்வராஜ் ஆகிய 4 பேரும் மது அருந்தி கொண்டிருந்தனர்.போதை தலைக்கேறியதால் 4 பேரும் சேர்ந்து கடை ஊழியர் செல்வராஜிடம் தகராறு செய்தனர்.

தகராறு முற்றவே செல்வராஜை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து வீர சோழன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த தமிழரசன், மருது பாண்டி ஆகியோரை கைது செய்தனர். மேலும் செந்தில், செல்வராஜ் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்

ஈரோடு



ஈரோடு: பவானி தாலுகா பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் மாவட்ட மேலாளர் ஆய்வு நடத்தி, வசூல்வேட்டை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜன., 27ம் தேதி பவானி தாலுகா பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளில், மாவட்ட மேலாளர் சுகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பல கடைகளில் குறைகள் கண்டறியப்பட்டன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, ஒவ்வொரு கடைக்கும் தலா, 5,000 ரூபாய் வீதம், 20க்கும் மேற்பட்ட கடைகளில் வசூல்வேட்டை நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.டாஸ்மாக் கடை ஊழியர்கள் கூறியதாவது:ஆய்வின் போது, ஊழியர்களை திட்டியதுடன், மாதாந்திர விற்பனை இலக்கு முடிக்கவில்லை, இருப்பு, பதிவேடு, விலை அதிகம் போன்ற குறைகள் இருப்பதாக கூறியுள்ளார். இதன்மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க டிரைவர் மூலம் கடைக்கு, 5,000 ரூபாய் வீதம், 20க்கும் மேற்பட்ட கடைகளில் வசூல் நடத்தப்பட்டுள்ளது. இதுபோக டிரைவருக்கென தலா, 500 ரூபாய் பெறப்பட்டுள்ளது.கப்பம் கட்டியதால்,பெரும்பாலான கடைகள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டன
.

கணக்கு காட்டுவதற்காக நான்கைந்து கடைகளில் மட்டும் குறைகள் சுட்டிக்காட்டப்பட்டன.விதிமுறைப்படி நடந்தாலும், தவறு செய்தாலும் ஒவ்வொரு கடையிலிருந்தும் கட்டாயமாக செல்ல வேண்டிய மாதாந்திர மாமூல் சென்று கொண்டிருக்கிறது. இவ்வேளையில், அதிரடி வசூல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாவட்ட மேலாளர்களாக தொகுதிப்பூதியம் அடிப்படையில் எம்.பி.., பட்டதாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். அதன் பின், தற்போதுள்ள வருவாய்த் துறை அதிகாரிகள் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவர். பதவியிலிருந்து விலகுவதற்குள், ஒரு ரவுண்ட் கலெக்ஷன் பார்த்துவிட வேண்டும் என்பதே அதிரடி வசூலுக்கு காரணம். தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாக அதிரடி வசூல் நடத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சுகுமாரிடம் கேட்ட போது,""மாதாந்திர விற்பனை இலக்கு முடிக்காதது குறித்து, பவானி பகுதியிலுள்ள நான்கு கடைகளில் ஆய்வு மேற்கொண்டேன். இதில், இலக்கு முடிக்காத மூன்று கடைகளில் குறிப்பு எழுதி, எச்சரித்துள்ளேன். அதிக விலைக்கு மது விற்ற ஒரு கடைக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளேன். திடீர் ஆய்வு நடவடிக்கை பிடிக்காததால், வசூல்வேட்டை நடத்துவதாக புகார் பரப்புகின்றனர். இதில், உண்மை ஏதுமில்லை. எப்போது வேண்டுமானாலும் வந்து பதிவேடுகளை பார்வையிடலாம். தற்போதுதான் கோவை மண்டல மேலாளர் புகாரில் சிக்கி கைதாகியுள்ளார். இதுபோன்ற செயல்கள் நடப்பது எப்படி சாத்தியமாகும்?,'' என்றார்.

ராமநாதபுரம் :

ராமநாதபுரம் : தொடர் மின்வெட்டால், ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், டாஸ்மாக் மது விற்பனை கடந்த மாதத்தை காட்டிலும், இம்மாதம் இதுவரை ரூ.3 கோடிக்கும் கூடுதலாக விற்பனையாகி உள்ளது.
மின்வெட்டால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக மின்சாரம் இருப்பதில்லை. இதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியை துவக்க உதவுவதை தவிர்த்து, அரசு, மின் உபயோகத்தை குறைப்பதற்குரிய வழிகளே ஆராயப்படுகிறது. இதனால் மின்வெட்டை பழகிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். டாஸ்மாக் மதுக்கடைகளில் மட்டும், விற்பனை களை கட்டி நடக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் ரூ.26 கோடி மதிப்பிலான 68 ஆயிரத்து 639 கேஸ் பெட்டிகளும், 24 ஆயிரத்து 057 பீர் பெட்டிகளும் விற்பனையாகியுள்ளன. ஜனவரியில் ரூ.29 கோடிக்கு, 75 ஆயிரத்து 944 மது பெட்டிகளும், 30 ஆயிரத்து 045 பீர் பெட்டிகளும் விற்பனையாகின. இம்மாதம் 16ம் தேதி வரை ரூ.17 கோடிக்கு, 44 ஆயிரத்து 315 மது பெட்டிகளும், 17 ஆயிரத்து 002 பீர் பெட்டிகளும் விற்பனை ஆகியுள்ளது
.
கடந்த மாதம் இதே கால கட்டத்தில் ரூ.14 கோடிக்கு, 38 ஆயிரத்து 423 மது பெட்டிகளும், 15 ஆயிரத்து 370 பீர் பெட்டிகள் மட்டுமே விற்பனையானது. இந்த மாதம் மூன்று கோடிக்கு அதிகம் விற்பனையாகியுள்ளது. கடந்த மாதம் பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் இருந்தும் இந்த அளவு விற்பனை இல்லை.