செவ்வாய், 30 அக்டோபர், 2012

சங்கடம் தீர்க்குமா?சங்கங்கள்



சங்கடம் தீர்க்குமா?சங்கங்கள்
டாஸ்மாக்கில் மதுபானக் கடைக்கு மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள்,பார் உதவியாளர்கள் வேலைவாய்ப்பு அலுவலகமுன்னுரிமை அடிப்படையிலும் முன்வைப்புதொகைகட்டியும் எடுக்கின்றார்கள் என்று தெரிந்த பட்டதாரிகள் தங்கள்வீட்டு பெண்களின் நகைகளை அடமானம் வைத்து அரசு சார்ந்தபணி எப்படியும் நமக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என எண்ணி பணியில் சேர்ந்தனர்.சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பலர் மதுக்கடை என்பதால் பணியில் சேர தயங்கினர்.மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் ஆட்கள் எடுக்கப்பட்டு சென்னையில் பணியாற்ற செய்தனர். பெரிய எதிர்பார்ப்புடன் பணிக்கு சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்கள் 16மணிநேரவேலைப் பளுவும்,திருட்டு நடந்தால் ஊழியரையே பலிசுமத்திய காரணங்களால் இரவுதங்கி 24மணி நேர பணியாளர்களாக உழைத்து விற்பனையை பன்மடங்கு உயர்த்தினர்.பார் உரிமம்தாரர்களின் மிரட்டல்,அதிகாரிகளின் லஞ்சம், மிகைநேரபணிபோன்றவைகளை கண்டு மிரண்ட ஊழியர்கள் தங்களுக்கென சங்கம் அமைத்து அதன் முலம் அரசுஊழியர்களின் சலுகைகளை பெறலாம் என எண்ணி வேலைகொடுத்த அம்மாபெயரிலேயே திருப்பூர் பகுதியில் சங்கம் ஆரம்பித்தனர்.சங்கம் ஆரம்பித்தவர்கள்மீது பொய் வழக்கு போட்டும்,தவறான குற்றச்சாட்டுகளை கூறியும் டாஸ்மாக்கிலிருந்து விலக்கினர்.இதில் பயந்த பணியாளர்கள் சங்கம் அமைக்கின்ற முடிவினை தவிர்த்தனர்.


வெள்ளி, 19 அக்டோபர், 2012

அரசு மதுவுக்கு இல்லை மறுப்பு .




அரசு மதுவுக்கு இல்லை மறுப்பு .


                                                                               உச்சநீதிமன்றம்.


சென்னையைச் சேர்ந்த, "டிராபிக்' ராமசாமி, சென்னை ஐகோர்ட்டில், ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், "தமிழக அரசே, "டாஸ்மாக்' என்ற பெயரில், மதுபான கடைகளைத் திறந்து, பொதுமக்களுக்கு, மதுபானங்களை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்' என, கோரியிருந்தார்.அந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், அவர், பொதுநலன் கோரும் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு, நீதிபதிகள், டி.கே.ஜெயின் மற்றும் மதன் லோகர், ஆகியோர் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், எம்.என்.கிருஷ்ணமணி மற்றும் ராஜா ராமன் ஆஜராகினர்.


வெள்ளி, 12 அக்டோபர், 2012

டாஸ்மாக் செய்திகள்: நன்றி தினமலர்

டாஸ்மாக் செய்திகள்: நன்றி தினமலர்: நன்றி தினமலர்   டாஸ்மாக் ஊழியர்களின் பரிதாப நிலை ... கண்டு கொள்ளுமா தமிழக அரசு ...   தமிழகம் எங்கும் சுமார் ...

புதன், 10 அக்டோபர், 2012

நன்றி தினமலர்

நன்றி தினமலர்
டாஸ்மாக் ஊழியர்களின் பரிதாப நிலை... கண்டு கொள்ளுமா தமிழக அரசு...
தமிழகம் எங்கும் சுமார் 7 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில் சுமார் 28 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். ஒரு டாஸ்மாக் கடையில் இரு விற்பனையாளர்களும், ஒரு சூபர்வைசரும் உள்ளனர். சூபர்வைசர் டிகிரி படித்திருக்க வேண்டும். விற்பனையாளருக்கு 10ம் வகுப்பு கல்வி தகுதியே போதுமானதாகும்.

கடந்த 2003ம் ஆண்டு துவக்கப்பட்ட டாஸ்மாக்கில் சூபர்வைசர்களுக்கு மாதம் ஒன்றுக்கு சம்பளம் ரூ.5 ஆயிரம் எனவும், விற்பனையாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் எனவும் அரசு நிர்ணயித்திருந்தது. இந்த சம்பளத்தில் பி.எப்., இஎஸ்ஐ பிடித்தம் போக சூபர்வைசருக்கு சுமார் ரூ.4200ம், விற்பனையாளருக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் ரூபாய் தான் கையில் கிடைக்குமாம்.