வியாழன், 29 நவம்பர், 2012

அடிமைத் தொழிலாளி


அடிமைத் தொழிலாளி


நன்றி பிபிசி

இந்தியா உள்ளிட்ட வறிய நாடுகளில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் உள்ளனர்.

உலகில் தற்போது 2 கோடியே 70 லட்சம் பேர் அடிமைத் தொழிலாளிகளாய் இருப்பதாக ஃப்ரீ த ஸ்லேவ்ஸ் அடிமை விடுதலை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து அமெரிக்காவுக்கும், கர்ரீபியன் தீவுகளுக்கும் அடிமைகளாக ஏற்றுமதியானவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட இது இரண்டு மடங்குக்கும் அதிகம் என்று இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மனித சரித்திரத்தில் எந்த ஒரு நேரத்திலும் இருந்த அடிமைத் தொழிலாளிகளின் எண்ணிக்கையைவிட தற்போதைய உலகில் கூடுதலான அடிமைத் தொழிலாளிகள் இருக்கிறார்கள் என்பது ஒரு அதிர்ச்சித் தகவலாக வந்துள்ளது.

மிக வேகமான ஜனத்தொகை அதிகரிப்பு, ஏழ்மை, அரசாங்க ஊழல் போன்றவை காரணமாக பல நாடுகளில் அடிமைத் தொழிலாளிகள் இன்றளவும் இருந்துவரவே செய்கிறார்கள் ஃப்ரீ த ஸ்லேவ்ஸின் ஆராய்ச்சியாளர் கெவின் பேல்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.



ஆப்பிரிக்க அடிமைகள்

முந்தைய நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டனர்.

16ஆம் நூற்றாண்டில் தொடங்கி 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை ஆப்பிரிக்காவிலிருந்து பிற கண்டங்களுக்கு கப்பல்களில் ஏற்றி அனுப்பப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1 கோடியே 25 லட்சம் என்று மதிப்பிடப்படுகிறது

ஆகவே தற்போதைய அடிமைகள் எண்ணிக்கை இதனை விட இரு மடங்குக்கும் அதிகம் என்று தெரியவருகிறது.

அடிமைகள் என்பதெல்லாம் பழங்கதை என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பல வடிவங்களிலும் அடிமைத் தொழில் இன்றளவும் எல்லா கண்டங்களிலும் நீடிக்கவே செய்கிறது.


நவீன காலத்து அடிமைகள்

பாலியல் தொழிலுக்காகவும் உடல் உழைப்புக்காகவும் சுரண்டப்படுபவர்கள், வாங்கிய கடனை திரும்பச் செலுத்தவில்லை என்பதற்காக கொத்தடிமைகளாக வேலைபார்க்க நேர்ந்தவர்கள் என்று பலதரப்பட்டவர்களை அடிமைகள் என்ற வரையறைக்குள் கொண்டுவர முடியும்.

"அடிமை என்றவுடன் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருவது வட இந்தியாவில் கல்லுடைக்கும் மக்களைத்தான்", என்று கூறுகிறார் அடிமைத் தொழிலாளிகள் பற்றி புலனாய்வு செய்து தகவல் வெளியிட்டுவரும் பத்திரிகையாளர் பென் ஸ்கின்னர்.

"தான் வாங்கிய ஒரு சிறு கடன் தொகையை திரும்பக் கொடுக்க வழியில்லாமல் தான் காலாகாலமாக கொத்தடிமையாக வேலைபார்ப்பதாக இந்த தொழிலாளிகள் கூறுகின்றனர்", என ஸ்கின்னர் தெரிவித்தார்.

வேலையை விட்டு ஓடினால், குவாரியின் ஒப்பந்தக்காரரால் கற்பனைக்கெட்டாத வன்முறை கட்டவிழ்த்து விடப்படும் என்று அத்தொழிலாளிளிகள் அஞ்சுவது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய உலகில் ஏழை நாடுகளில்தான் அடிமைத் தொழிலாளிகள் பெரு எண்ணிக்கையில் காணப்படுகின்றனர்.

ஆனால் வளர்ந்த நாடுகளிலும்கூட அடிமைத் தொழிலை ஒழிப்பதில் சட்டங்கள் போதிய வலிமை உடையதாக இல்லை என்று கெவின் பேல்ஸ் நொந்துகொண்டார்.

"வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சொத்துபத்துக்களையும் அடமானம் வைத்து விட்டு கள்ளத்தோனி ஏறி வெளிநாட்டுக்கு வந்த பின்னர், பயண ஆவணங்களையும் பறிகொடுத்த நிலையில், வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு அடுப்படியில் ஓய்வு உறக்கம் இன்றி வேலைபார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளியும்கூட இந்தக் காலத்து அடிமைகள்தான்." என அமெரிக்க அதிபர் ஒபாமா அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

நமது உரை

 டாஸ்மாக் ஊழியர்களும் நவீன காலத்து அடிமைதான் என்பதற்கான நிகழ்வின் பதிவு

உலகம் முழுமையிலும் தற்பொழுது அடிமைத்தொழிலாளர்கள் அதிகரிப்பைப் பார்க்கும் பொழுது கூடிய விரைவில் தொழிலாளர்களின் ஒன்றிணைந்த புரட்சி ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது தெரிய வருகின்றது.தொழிலளர்கள் நசுக்கப்பட்ட காலங்களில் எல்லாம் எழுச்சியும் கண்டது தான் வரலாறு.நவம்பர் 21-23 நக்கீரனில்மிரட்டும் ஆளும்கட்சி” என்ற தலைப்பில் மதுரை திருமங்கலத்தில் ஆளும்கட்சியினரின் பார் வசூல்கள் பற்றிய செய்தி வெளியிட்டது.அதில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் திரு சவுண்டையா அவர்களிடம் ஊழியர்களின் கூடுதல் விலை விற்பனை பற்றிய கேள்விக்கு 1200 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் டாஸ்மாக்கில் வேலைக்கு சேரச்சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தலியே.சம்பளம் எவ்வளவுன்னு தெரிஞ்சுக்கிட்டுத்தான வேலைல சேர்ந்தாங்க என வினவியுள்ளார்.இவரின் பேச்சில் எவ்வளவு தொழிலாளர் பற்றுதல் பார்த்தீர்களா? டாஸ்மாக்கில் நாங்கள் பணிக்கு வந்த பொழுது 3000கோடி விற்பனையை 9ஆண்டுகளில் 20000கோடியாக மாற்றியுள்ளோம்.அதாவது 6மடங்கிற்கு மேல் உயர்த்தியுள்ளோம்.ஆனால் எங்களின் சம்பளம் ஒருமடங்கு கூட உயர்த்திக்கொடுக்காத டாஸ்மாக் நிர்வாகம் என்றாவது தொழிலாளர் சட்டத்தின் ஏதாவது ஒரு பகுதியையாவது கடைபிடிக்கும் என்று நினைத்துப் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இது போன்ற தொழிலாளர்கள் கஷ்டம் தெரியாத இயக்குனரிடம் நியாயம் என்று கிடைக்கும்? தொழிலாளர்கள் அமைதியாக இருப்பதாக நினைக்கும் இவர்களுக்கு தொழிலாளர்கள் அமைதியாக இருக்கும் எரிமலைக்கும் அணுவை போன்று எங்களை சிறியவர்களாக நினைப்பவர்களுக்கு அணுவெடிப்பினை போன்றவர்கள் என கூடிய விரைவில் நிரூபிப்பார்கள்.

.ஷாஜஹான்,9942522470
திருமங்கலம்.மதுரை.

கருத்துகள் இல்லை: