சனி, 22 டிசம்பர், 2012

பார் பயங்கரம்


பார் பயங்கரம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் துவங்கி பத்தாவது ஆண்டினை நெருங்கிவரும் நிலையில் விற்பனையில் டாஸ்மாக்கடைகள் வசூல்சாதனைகள் படைத்துவருவதுபோன்று டாஸ்மாக் பார்கள் குற்றநடவடிக்கைகளில் சாதனைபடைத்து வருகின்றன.சமீபகாலமாக பார்கள் அனைத்தும் அழுக்கடைந்த,சுகாதாரமற்ற நோய்களை உற்பத்திசெய்யும் மையங்களாக மட்டுமின்றி திருட்டு மற்றும் கொலைகளத்திற்கான திட்டம்தீட்டும் இடமாகமட்டுமின்றி குற்றநடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் இடமாகவும் அமைந்துள்ளது.டாஸ்மாக் பார்களில் தொடர்ந்து கொலைகளும் கொள்ளைகளும் அரசியல் குண்டர்களின் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.


“பார்களில் நடக்கும் இந்த குற்றநடவடிக்கைகள் குறித்து காவல்துறையினரிடம் கேட்கும்பொழுது ஒவ்வொரு பார்களும் அந்த பகுதி அரசியல்வாதிகளின் கையில் இருப்பதால் தான் பெருமளவில் கொலை கொள்ளைகள் நடைபெறுகின்றன என கூறுகின்றனர்." நன்றி tlmes of india டிசம்பர்2,2012.