செவ்வாய், 31 டிசம்பர், 2013

கிங்பிஷர் காலண்டர் 2014


கிங்பிஷர் நிறுவனமானது கட்டிடபொறியியல் துறை , உரங்கள்விமான போக்குவரத்து மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்  மற்றும்  யுனைடெட் ப்ரூவரிஸ் (மதுபானம், கனிம நீர் மற்றும் சோடா தொழில்கள் )போன்ற வணிகங்களை செய்துவருகின்றது. கிங்பிஷர் நிறுவனமானது தொழிலதிபர் விஜய்மல்லையா விற்கு  சொந்தமானதாகும். இந்நிறுவனமானது கடந்த  2003 ல் இருந்து  (டாஸ்மாக் துவங்கிய ஆண்டு) காலண்டரை வெளியிட்டு வருகின்றது.தற்பொழுது  கிங்பிஷர் நிறுவனமானது வணிக ரீதியாக பலகஷ்டங்களை சந்தித்து வரும் நிலையில் தனது ஊழியர்களுக்கு பல மாத சம்பளத்தினை பாக்கி வைத்து இருந்தாலும்  இந்த ஆண்டும் தனது காலண்டரை வெகுவிமர்சையாக வெளியிட்டுள்ளது . இக்காலண்டருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஏன் என்பதினை கீழே இந்த ஆண்டின் காலண்டர் இனணக்கப்பட்டுள்ளது கண்டு மகிழவும்.பலரும் கிரிகேரி காலண்டரின் வரலாறு தெரிந்து கொள்ளவிட்டாலும் கிங்பிஷர் காலண்டரின் வரலாற்றினை அறிவர் தாங்களும் அறிய பின் தொடர்வீர்.

பிரபல பேஷன் போட்டோகிராபர் அதுல் மதிப் அவர்களே கடந்த 10 ஆண்டுகளாக கிங்பிஷர் நிறுவனத்திற்காக புகைபடங்களை எடுத்துவருகிறார்.புகைப்படங்களுக்கான ஆலோசனைகளை விஜய் மல்லையா மகன் சித்தார்த் மல்லையாவும்,மாடல்கள் தேர்வுதனை லிப்பங்சீ எல்வாடீ அவர்களும், சர்வதேச கலைஞர் பியான்கா அவர்கள் ஒப்பனையும் செய்கின்றனர்.

வியாழன், 26 டிசம்பர், 2013

குளிரில் குதுகலிக்க



பனியை விரட்ட...
பத்து ஐடியாக்கள்!

நியாயமாக பார்த்தால், இந்தக் கட்டுரையை பத்து, பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே எழுதியிருக்கவேண்டும். ஒரு காரியத்தை செய்யாமல் விடுகிறதை  காட்டிலும், தாமதமாகவேனும் செய்து முடிப்பது நல்லது என்ற முன்னோர் வாக்கியத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, குளிர் துவங்கி இரு வாரகாலத் துக்குப் பிறகு, இந்த குளிர்கால ஸ்பெஷல் கட்டுரை ரிலீஸ் ஆகிறது.

‘உஷ்... அப்பாடா! வெயில் கொடுமை கண்ணைக் கட்டுதே...’ என்று வியர்த்து விறுவிறுக்கிற வேலூர், விருதுநகர் ஏரியாக்கள் கூட, டிசம்பர் பிறந்ததும், வித் தியாசமான வேறு ஒரு மேக்கப் போட்டுக் கொள்ளும். காலை எட்டு மணிக்குக் கூட, விட்டு விலகாத பனி, மாலை ஐந்து ஆனாலே... வெடவெடக்கச்  செய்கிற ‘கூதல் காற்று’, அப்புறம் பிரிட்ஜை திறந்ததும் அடிக்கிறது போல இரவு முழுக்கவே நடுக்குகிற குளிர். போஸ்ட் மார்ட்டம் அறைகளில் போர்த்தி  வைத்திருக்கிற பிணங்கள் போல, தலை முதல் கால் வரை ஒட்டுமொத்தமும் இழுத்துப் போர்த்திக் கிடக்கிற மனித உடல்களை டிசம்பர் குளிர் நமக்கு  அறிமுகம் செய்யும்.

நாமெல்லாம், வெயில் தேசத்து மனிதர்கள். வருடத்தின் கடைசி நாட்களில் வந்து போகிற இந்த ‘வெடவெட’ குளிர் நமக்கு அதிகம் அறிமுகம் இல்லாதது.  இதை சமாளிக்க, இந்த மாதங்களில் மருந்து கடைகளிலும், ‘‘மருந்து’’ கடைகளிலும் (புரிகிறவர்கள் புரிந்து கொள்ளுங்கள்; புரியாதவர்கள் டாஸ்மாக் எடிட் டரை தனியாக அணுகி கேட்டுக் கொள்ளுங்கள்) மக்கள் கூட்டம் அலைமோதுகிறதை கவனித்திருக்கலாம். சரி. இந்தக் குளிரை எப்படி எதிர்கொள்வது? சிலுசிலுவென பனி அடிக்கையில், சூடாக குடிப்பது சுகமான அனுபவம்.

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

போட்டி டாஸ்மாக்


தமிழகத்தில் சென்ற ஆண்டிற்கும் நடப்பாண்டிற்கான குற்றநடவடிக்கைகள் பற்றிய தகவலை சமீபத்தில் மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி காந்திராஜன் அவர்கள் தெரிவித்ததில் மொத்ததில் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்திருந்தாலும் போலிமது, மதுபானஆலை ,வெளிமாநில சரக்குகள் விற்பனை போன்ற மதுகடத்தல் குற்றங்கள் அதிகரித்து இருப்பது தெரியவருகிறது.இந்த வழக்குகளின் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது தமிழகத்தில் சிலர் பன்னெடுங்காலமாக போட்டி டாஸ்மாக் நடத்திவருவதே புலப்படுகின்றது.

திரு.காந்திராஜன் மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி அவர்கள்  கூறியதாவது: கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலிருந்து கடத்திவரப்பட்ட 22 லட்சம் மதிப்புள்ள கள்ளசாராயம் 25500 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 600க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம்விடப்பட்டதில்  ரூ1.14 கோடி கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.இந்த மதுகடத்தல் குற்றசாட்டில் பெண்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர்.

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

டாஸ்மாக் இடமாற்றம்


டாஸ்மாக் நிர்வாகம் முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்டமேலாளர்களுக்கு கடந்த 21.11.2013 தேதியிட்ட மேலாண்மை இயக்குநர் அவர்களின் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது.அதில் சில்லறை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுவருவதை தடுப்பது தொடர்பாக என பொருளிட்டு டாஸ்மாக் கடைகள் பல்வேறு பிரச்சனைகள் காரணங்களால் தொடர்ந்து இடமாற்றங்கள் நடைபெறுவதாகவும் இதனால் அரசிற்கு மிகுந்த வருவாய் இழப்பும் சட்டஒழுங்குபிரச்சனையும் அரசிற்கு அவப்பெயரும் ஏற்படுவதால் இனி எக்காரணத்தினை கொண்டும் இடமாற்றம் செய்யக்கூடாது எனவும் தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.
ஏன் இந்த முடிவிற்கு டாஸ்மாக் நிர்வாகம் தள்ளப்பட்டது?
டாஸ்மாக் கடைகள் ஒவ்வொரு ஆட்சிமாற்றத்தின் போதும் ஆளும் கட்சிகாரர்களின் கையில் ஒப்படைக்கப்படுகின்றது. என்ன  டாஸ்மாக் கடைகளை அரசு ஏற்று நடத்துவதாக தானே மக்கள் நினைகிறார்கள் 

வியாழன், 21 நவம்பர், 2013

உலகின் டாப்10 பார்கள்.

அர்த்தசாஸ்திர கௌடில்யர்  மதுபான விற்பனைதனை அரசே எடுத்து நடத்தவேண்டும் என்ற உயரிய கருத்தினை கூறியதோடு மது அருந்தக்கூடிய மதுகூடங்கள்(பார்கள்) எவ்வாறு இருக்கவேண்டும் மற்றும் எவ்வாறு பராமரிக்கப்படவேண்டும் என்று அறவுரை கூறுகிறார்.நமது அரசோ அவர் கூறியதில் மதுகடைகளை டாஸ்மாக் மூலம் அரசே எடுத்து நடத்தி பாதி அறவுரையின் படி நடந்தாலும் மீதியான மதுக்கூட விசயத்தில் அவர்தம் கருத்தினை ஏற்காததோடு தனியார் வசம் பார் உரிமம்களை வழங்கி சுகாதாரக்கேடு நிறைந்த டாஸ்மாக் பார்களையே மதுப்பிரியர்களுக்கு வழங்கி வருகின்றது.இந்த கப் பான வறட்சி நிறைந்த பார்களை கண்டுவரும் நமது குடிப்பிரியர்களை இன்னும் வெறுப்பேற்றும் முகமாக உலகின் தலைசிறந்த பத்து பார்களை அறிமுகம் செய்கிறது நமது டாஸ்மாக் செய்திகள் தளம்..
                                                                                     
1 ) Cova d’en Xoroi, Minorca, (கோவண்டன் எக்ஸ்ரோய், மீனார்கோ)
மீனார்கோ தீவின் தெற்கு கடற்கரையில் ஒரு அழகான குன்றின் விளிம்பில் அமைந்துள்ள  இந்த பாரானது இயற்கையின் சுவர்க்கபூமியாக உள்ளது, இந்த குகையின் சுற்றுப்புறங்களையும் கண்கவர் காட்சிகள் நிறைந்த மதுகூடங்கள் இயற்கை அழகுடனே கூடிய கீற்று கொட்டகைகளின் அழகு காண கண்கொள்ளாது. இந்த கீற்று கொட்டகை பாரினில் அமர்ந்தபடியே அழகான சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் பார்க்கலாம். பல மதுபிரியர்கள் சூரிய உதயம் துவங்கி சூரிய அஸ்தமனம் வரை இங்கு மதுஅருந்தி விடுமுறையை கழிப்பர்.என்ன இந்த முறை உங்கள் விடுமுறை மீனார்கோ தானே…

திங்கள், 4 நவம்பர், 2013

டாஸ்மாக் தீபாவளி

தீபாவளி நாளில்  விபத்து, பட்டாசு வெடியால் காயம் உட்பட பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி 108 ஆம்புலன்சுக்கு அழைப்புகள் வந்த வண்ணம் இருந்ததாகவும் அரசு மருத்துவமணைகளில் சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள், ஊழியர்கள் திணறியதாக செய்திகள் கூறுகின்றன.
தீபாவளி என்றவுடன் புத்தாடை இனிப்பு புதியதிரைப்படம் என்று இருந்த இளைஞர்கள் தற்பொழுது மிக அதிகமாக டாஸ்மாக் கடையே தீபாவளி கொண்டாடும் இடமாக கொண்டுள்ளனர்.
நல்ல நாள் என்பதால் வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்கள் பணியினை கவனிப்பது ஓரு புறமும் சரி நல்லநாள் தானே மகிழ்வாக பிள்ளைகள் இருக்கட்டும் என கவனிக்க தவறுகின்றனர். இந்நிலையில் இளைஞர்கள் நண்பனின் பைக் மற்றும் பெற்றோரின் பைக்கை எடுத்துக்கொண்டு டாஸ்மாக் கடைநோக்கி படை எடுக்கின்றனர். இளைஞர்கள் சாதரணமாகவே டூவிலர்களை வேகமாக ஓட்டும் குணதிசியங்கள் கொண்டாலும் தன்னுள் இறங்கிய மதுவினால் இன்னும் அதிக வேகம் கொண்டு சாலைகளில் சாகசம் செய்து தன்னையும் பிறரையும் விபத்துகளில் ஆட்படுத்துகின்றனர்.

புதன், 23 அக்டோபர், 2013

துளையிட்டு மது திருடிய துணைகள் துயில்




வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு செல்லும் சாலையில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இந்த மதுக்கடையின் சுவரில் துளைபோட்டு திருடப்பட்டு இருப்பதாக அந்த பகுதியினர் தெரிவித்த தகவலை தொடர்ந்து மதுக்கடை மேற்பார்வையாளர் ராஜ்குமார் நேற்று காலை 6 மணிக்கு கடைக்கு வந்து பார்த்தார்.

அப்போது கடையின் சுவரில் துளைபோட்டு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுபற்றி அவர் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து 100 அடி தூரத்தில் மது பாட்டில்கள் அடங்கிய சாக்குமூட்டையை தலைக்கு வைத்தபடி ஆண்-பெண் இருவர் தூங்கிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அங்கு தலைக்கு மதுபாட்டில் மூட்டையை வைத்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள் காவேரிப்பாக்கத்தில் உள்ள அய்யன்பேட்டைசேரி கிராமத்தை சேர்ந்த விஜயன்(வயது 35), அவரது மனைவி வள்ளியம்மாள்(30) என்பது தெரியவந்தது. அவர்களை எழுப்பி விசாரித்த போது அவர்கள் கூறியதாவது:-

புதன், 9 அக்டோபர், 2013

குடி விடு


திருமங்கலத்திற்கும் மதுரைக்குமான எனது தினசரி வேலைக்கான பயணங்களுக்கிடையே திருப்பரங்குன்றம் மற்றும் திருநகர் பகுதிகளில் “குடிவிடு” என்ற நூல்வெளியீட்டு விழாவிற்கான சுவர் விளம்பரங்கள் என்னை இயற்கையாகவே அதன்பால் ஈர்த்தன. சரி என்னதான் சொல்கிறது நூல் மற்றும் பேச்சாளர்கள் என்பதனை அறியும் நோக்கில் அக்டோபர் 1ல் மதிய உணவிற்கு பின்பு ஒரு குட்டி உறக்கம் என்ற பெயரில் நீண்ட தூக்கத்தினை தொடர்கையில் திடீரென்று எழுப்பிய பொழுது மணி மாலை5 ஐ தாண்டி இருந்தது. உடன் எழுந்து குட்டி குளியலை போட்டுவிட்டு எனது பைக் தனை இயக்கி கியர்தனை முறுக்கி திருமங்கலம் நகர் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்நிலையங்களில் நாளை விடுமுறை என்பதால் இல்லம் சென்றடைய பலர் முண்டியடித்து பஸ்களில் இடம்பிடிப்பதும் சாலைகளை கடப்பதுமாக ஜனநெருக்கடிகளை கடந்து கொண்டிருக்கையில்  எனது கவனம் அனைத்தினையும் சாலையில் வைத்து திருமங்கலத்தினை கடக்கையில் மறவன்குளம் கண்மாய் அருகில் மாலையில் அடித்த வெயிலுக்கு  பகரமாக விண்ணவன் மழைச்சாரலினை வழங்க அந்த இனிய குளிர்காற்றினை கிரகித்தவனாக பைக் வேகத்தினை அதிகப்படுத்தி கப்பலூர் பாலத்தில் ஏறி இறங்குகையில் மயில்களின் அகவல்குரல்களை ரசித்துக்கொண்டே செல்கையில் கப்பலூர் காலனி மரங்களின் பறவைகள் நாங்கள் என்ன மயிலுக்கு குறைவானவர்களா என போட்டியிட்டு தங்களது ரீங்கார குரல் கொண்டு அந்தப்பகுதி முழுவதினையும் ஆக்கிரமித்தன,

சனி, 7 செப்டம்பர், 2013

டாஸ்மாக் மாற்றங்கள்

டாஸ்மாக் இணை இயக்குநராக திரு.மோகன் அவர்கள் நியமிக்கப்பட்ட பின்பு சென்ற ஆகஸ்டில் தினசெய்தித்தாள்கள் டாஸ்மாக்கில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க முதல்வர் அம்மா அவர்கள் தனிக்குழு ஒன்றினை அமைத்து இருப்பதாக செய்திகள் வெளியிட்டன.அதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் கொள்முதல் அதிகாரி வேறு துறைக்கு மாற்றப்பட டாஸ்மாக்கில் மாற்றங்கள் பல தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மாற்றங்கள் என்பது மாறாதது என்ற பொன்மொழிக்கேற்ப டாஸ்மாக்கில் ஏற்பட்ட மாற்றங்களை வரிசையாக காண்போம்.மாற்றங்களினால் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பயன்பெறுவதும் ஊழியர்களின் வாழ்க்கைத்தரத்தின் நிலையில் மட்டும் மாற்றம் என்பதே ஏமாற்றமாக மட்டும் இருந்து வருவதினை பற்றிய கட்டுரை
சரக்கு குவிப்பு:

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை டாஸ்மாக் கடைகளுக்கு, சராசரி விற்பனையை காட்டிலும், தேவைக்கு அதிகமாக அதாவது, 60 - 90 நாட்களுக்கு தேவையான சரக்குககள் அனுப்பப்பட்டு வந்தது.இதனால், அதிகமான அளவிற்கு சரக்கு இருப்பு வைக்கப்படுவதால், பல இடர்பாடுகளை டாஸ்மாக் ஊழியர்கள் சந்தித்தனர்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

கருப்புக்கு சரக்கு.

தமிழகத்தின் கிராமங்களின் காவல் தெய்வமாக விளங்குவதில் முதலிடம் வகிப்பவர் கருப்பசாமி ஆகும்.கருப்பசாமி சங்கிலி கறுப்பன் என்றும் அழைப்பதுண்டு. கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.

கருப்புசாமி, கருப்பாயி என்னும் பெயர்களைத் தமிழர்கள் தம் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கம். இவை இந்தத் தெய்வத்தை அழைக்கும் பெயர்கள். 'காத்து கருப்பு அண்டாது' எனக் கூறி இருளில் செல்வோருக்குக் குதிக்காலின் பின்புறம் கரியைக் குழைத்துப் பூசி அனுப்பும் (மூடப்)பழக்கம் இருந்துவந்தது. இந்த வழக்கில் 'கருப்பு' என்னும் சொல் பேயை உணர்த்தும். கருப்பு என்னும் சொல்லுக்கு வறுமை, பஞ்சம் என்னும் பொருள்களும் உண்டு. கரும்பு சாற்றைக் கருப்பஞ்சாறு என்கிறோம். அதுபோலக் கருப்புசாமியைக் கருப்பசாமி எனவும் வழங்குகிறோம். தமிழ்நாட்டு காவல் தெய்வங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற முக்கிய தெய்வமாக கருப்புசாமி அருள்பாலித்து வருகிறார்.

வியாழன், 4 ஜூலை, 2013

மதுகிண்ணங்கள்

சங்க கால குடிமகன்கள் தொண்டு தொட்டு நமது டாஸ்மாக் குடிமகன்கள் வரை தான் அருத்தக்கூடிய மதுவகைகளை அழகான குடுவைகளில் பாதுகாக்ககூடியவர்களாகவும் மற்றும் சிறந்த கோப்பைகளைக்கொண்டு மது அருந்தக் கூடியவர்களாக இருந்துவருவது அனைவர் அறிந்தது.பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்ற பழமையான சொற்றொடர் மூலம் பயன்படுத்தும் பாத்திரங்களில் முந்தைய சமுகத்தினர் அதிக கவனம் செலுத்தியது தெரியவருகின்றது. பண்டைய நாகரீகங்களை பற்றி தெரிவிக்கும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அக்காலத்து மக்களின் பயன்பாட்டு பாத்திரபண்டங்களை கொண்டே நாகரீகத்தில் எந்த நிலைதனில் அம்மக்கள் இருந்தனர் என கூறுகின்றனர். பண்டைய கள் குடிக்கும் குடிமகன்களின் கள் அருந்தும் பாத்திரமான மண்குடங்கள் நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டவைகளாக இருந்து வந்தது.கள் குடிமக்கள் தங்களது மீசையினை மிகப்பெரியதாக வளர்ப்பர்.இந்த மீசையினை கள் குடிக்கும்  மண்பானைகளில் விட்டபடியே கள்ளினை பருகுவர் அந்த பானையில் உள்ள தேனீகள் பூச்சிகளை வடிகட்டும் பில்டராக மீசைதனை பயன்படுத்தினர்.தற்போதைய பாண்டிச்சேரி மற்றும் கேரளா பகுதி குடிமக்கள் பிளாஸ்டிக் மக்குகளிலேயே கள் மற்றும் சாராயம் அருந்துகின்றனர்.தமிழக டாஸ்மாக் குடிமக்கள் பிளாஸ்டிக் கப்களிலேயே பார்கப்புகளுக்கிடையே குடித்து சாதனை படைத்து வருகின்றனர்.சரி வாருங்கள் கண்ணாடி மதுகோப்பைகளை பற்றி காண்போம்.

செவ்வாய், 2 ஜூலை, 2013

ஏமாற்று ஏலம்

 
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அமைந்துள்ள பார்களை நடத்துவதற்கான ஏலநடவடிக்கைகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.            இந்த ஏலத்திற்கான விண்ணப்பங்கள் டாஸ்மாக் மாவட்ட அலுவலகங்களில் கிடைக்கும். இந்த விண்ணப்பங்களை சாமானியர்கள் யாரும் எளிதில் பெற்றுவிடமுடியாது. அந்தந்த ஆளும்கட்சி மாவட்ட செயலாளர்களிடம் டோக்கன் பெற்று வரும் நபர்களுக்கு மட்டும் தான் விண்ணப்ப படிவம்.அதே போன்று பார் ஏலநடவடிக்கைகளை பற்றி முக்கிய பத்திரிக்கைகளில் எல்லாம் விளம்பரம் இல்லை.யாருமே வாங்கிட முடியாத நாளிதழில் விளம்பர வெளியிடுவதோடு ஆளும்கட்சிக்காரர்களை தவிர்த்து மற்ற எவரும் கலந்துகொள்ள முடியாத நிலையினை ஏற்படுத்தி டாஸ்மாக் நிர்வாகம் ஏலத்தினை நடத்திவருகின்றது.

வியாழன், 20 ஜூன், 2013

கொத்தடிமைகள்


மதுபானம் விற்பது நம் சமூகத்தில் ஓர் இழிவான வேலை. ஆனாலும், அந்த வேலையில் சேர முண்டியடித்தது பட்டம் படித்த இளைஞர் கூட்டம். அரசு வேலை என்றால் சும்மாவா? ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முயன்றனர். 36 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது. மேற்பார்வையாளர், விற்பனையாளர், விற்பனை உதவியாளர் என்ற பணிகள் தரப்பட்டன. டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 20 ஆயிரம் கோடியைத் தாண்டியது. இந்த ஆண்டிற்கான இலக்கு 25 ஆயிரம் கோடி. ‘கவர்மென்ட்டே எங்களை நம்பித்தான் இருக்கு’ என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டாலும், இவர்கள் அனுபவிக்கும் சிரமங்கள் ஏராளம்.

ஞாயிறு, 9 ஜூன், 2013

கிளப் சூது கவ்வும்.





தமிழகத்தில் புதிய கலச்சாரநடவடிக்கையாக மனமகிழ்மன்றங்கள் (ரெக்ரியேஷன் கிளப்)  நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.இந்த மனமகிழ்மன்றங்கள் துவக்கத்தில் பண்டிகை கொண்டாட்டம்,நம்பிக்கையூட்டும் சொற்பொழிவுகள்,  கிளப் உறுப்பினர்கள் முன்னேற்றபணிகள் முதலியவைகளும், புத்தகம் மற்றும் செய்திதாள் படிப்பிற்கு நூலகம் அமைத்தும்,கிளப் உறுப்பினர்களால் டென்னிஸ்,பூப்பந்து,செஸ்,கேரம்,பில்லியர்ட்ஸ் போன்றவைகள் விளையாட்டு மைதானம் அமைத்து விளையாடி வருவதற்காக அமைக்கப்படுவதாக கூறி அமைத்த பின்பு சீட்டாட்டத்தினை முக்கியமாக கொண்டு இயங்கிவந்தது. இதனை பலரும் கண்டுகொள்வதில்லை. சிலநேரங்களில் சீட்டாட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கைகலப்பிற்கு வந்து காவல்நிலையம் வரை வந்தாலும் இதை பயன்படுத்துபவர்களும் நடத்துபவர்களும்  மேல்தட்டு மக்களாய் இருப்பதால் பிரச்சனைகள் மூடிமறைக்கப்படும்.ஆனால் சமீப காலங்களில் கிளப்களில் நடைபெறும் வரம்புமீறிய  பிரச்சனைகள் செய்திதாள்களில் அடிக்கடி வரக்காரணம் மது. இந்த கிளப்களினால் டாஸ்மாக்கினை மிஞ்சும் அளவிற்கு மது கிடைப்பதே பிரச்சனையின் துவக்கமாகும்.

திங்கள், 3 ஜூன், 2013

மதுபான ஆலை கொள்ளை


தனியார் மதுவிற்பனையின் போதும் சரி தற்பொழுது டாஸ்மாக் மதுவிற்பனையின் போதும் நமது மெகா குடிகாரர்கள் தவிர்த்து அனைவரும் அறிந்த சரக்கு என்றால் எம்.சி பிராந்தி,ஓல்ட் மங் ரம் இது போன்ற குறிப்பிட்ட சில வகை மதுவகைகளும் சில உயர்தர குடிகார அன்பர்களுக்கு ஆர்.சி, விண்டேஜ் போன்ற சரக்குகளுமே தெரியும்.இன்னும் சொல்ல போனால் 2003 டாஸ்மாக் துவங்கும் முன்பு வரை நமது தமிழகத்தில் மது தயாரிப்பு ஆலைகளானது ஐந்து மட்டுமே.இவைகளின் தயாரிப்பே பன்னெடுங்காலமாக நமது மதுபானப்பிரியர்கள் விரும்பிபருகி வந்தனர்.அந்த ஐந்து கம்பெனிகள் விபரம்.
1.
பாலாஜி டிஸ்டில்லர்ஸ்.
2.
எம்.பி.டிஸ்டில்லர்ஸ்.
3.
மோகன் டிஸ்டில்லர்ஸ்.
4.
சிவா டிஸ்டில்லர்ஸ்.
5.
சதன் அக்ரிபுரேன் டிஸ்டில்லர்ஸ்

ஞாயிறு, 26 மே, 2013

புதுசரக்கு 5

புதுசரக்கு 5

நமது டாஸ்மாக்கில் புது சரக்கு அறிமுகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது மெக்டோவல் நிறுவனம் லூயிஸ் வெராண்ட் எக் ஸ் ஓ என்ற பிரஞ்ச்வகை பிராந்தியினை அறிமுகம் செய்துள்ளது.

திங்கள், 13 மே, 2013

நவீன பரதேசி


மசாலா நிறைந்த நமது தமிழக திரைப்படதுறையில் அத்திபூத்தார் போல எப்பொழுதாவது தொழிலாளிகள் படும் கஷ்டங்களை எடுத்துகாட்டிடும் திரைப்படம் வெளிவரும். மாநகரங்களில் துணிக்கடைகளில் தொழிலாளர்கள் படும் அவஸ்தைகளை "அங்காடி தெரு" என்ற திரைப்படம் மூலம் கண்ட நமக்கு அந்த வரிசையில் கமர்சியல் அதிகம் கலக்காமல் வந்து நல்ல முறையில் ஓடிக்கொண்டிருக்கும் பாலாவின் "பரதேசி" படம் பார்த்தவுடன் அன்றைய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் படும் இன்னல்கள் இன்றைய டாஸ்மாக் ஊழியர்களின் நிலையினை எல்லாவிதங்களிலும் ஒத்திருப்பதினைக் கண்டு நாளைய தலைமுறையினர் நமது வாழ்கையினையும் படம்பிடிப்பது திண்ணம் என்பதினால்  அக்கதைக்கான எனது முன்னுரையை இங்கே தீட்டுகின்றேன். பரதேசி படத்தின் தேயிலை தோட்டத் தொழிலாளிக்கும் நமது டாஸ்மாக் ஊழியருக்குமான ஒற்றுமைகளை பட்டியலிடுகின்றேன்.