திங்கள், 21 ஏப்ரல், 2014

தேர்தல் களத்தில் டாஸ்மாக்.

இன்னறய அதிபுத்திசாலி சிறு குழந்தைகள் தங்களின் காரியங்கள் நடக்க பெற்றோர்கள் முன் சிறிது நேரம் சமத்தாக நடந்து (நடித்து) தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வர்.அலுவலகங்களில் அடுத்தநாள் விடுப்பு தேவை என்றால் ஓடிஓடி வேலை செய்தும்,  அதிகாரியை காக்காபிடித்து நடித்து பின்பு விடுப்பு கேட்பது வழமை. மனிதன் இயல்பு சிலநேரங்களில் தங்கள் காரியம் நடக்க நடிப்பர் ஆனால் அரசியல்வாதிகளோ எல்லாகாலங்களில் எல்லா நேரங்களிலும் நடித்து வரும்  நிலை பாரதத்தில் தொடர்கதையாகிவிட்டது. ஆளும்கட்சி எதிர்கட்சி என அனைத்து அரசியல்கட்சிகளும் மக்கள்பிரச்சனைகளில் கவனம் செலுத்தாதது போல் தொண்டர்களையும் கண்டுகொள்வது  இல்லை.தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் பிரச்சனைக்களை கையில் எடுப்பது போல் தொண்டர்களையும் தங்கள் கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ள பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆயுதமாக அரசியல்வாதிகளின் கண்டுபிடிப்பு தான் டாஸ்மாக் மதுபானம். இந்தியாவில் 2009-ம் ஆண்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்  30 % குற்றவாளிக் கூண்டில் நிற்பவர்கள்  என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமில்லாது பலர் கோடிஸ்வரர்கள்  இவர்கள் தேர்தல் பரப்புரைக்கு மட்டும் செலவு செய்து பயன்படுத்தும் ஆயுதம் டாஸ்மாக் மதுபானம்.

புதன், 9 ஏப்ரல், 2014

இன்னும் எத்தனை காவு?

தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் நாளுக்கு நாள் உயர்ந்துவருகின்ற அதே வேலையில் டாஸ்மாக் பணியாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது.
டாஸ்மாக் ஊழியர் அடித்துக் கொலை
சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள சீரகாபாடி பெரிய மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் குமார்(வயது37). இவர் மல்லூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இவர் வழக்கம் போல் கடையை மூடி விட்டு மோட்டார்சைக்கிளில் சீரகாபாடிக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
வழியில் வீரபாண்டி அருகே கடத்தூர் பி.கே.வளவு என்ற இடத்தில் வரும் போது திடீரென மர்மகும்பல் அவரை வழிமறித்து உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியது. இதில் குமார் படுகாயம் அடைந்து மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். பின்னர் அவர்கள் குமார் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.