திங்கள், 13 அக்டோபர், 2014

டாஸ்மாக் முறைகேடுக்கு முற்றுபுள்ளி எவ்வாறு?


டாஸ்மாக் முறைகேடுக்கு முற்றுபுள்ளி எவ்வாறு?

சமீபத்திய தினசரி செய்தி பத்திரிக்கையில் வந்த விபரம்:

டாஸ்மாக்கில் நடந்த கையாடல் விவகாரம் குறித்து உயர்அதிகாரிகள் குழு மாநிலம் முழுவதும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. டாஸ்மாக்கில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க 18 பேர் கொண்ட குழு (பறக்கும் படை) அமைக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில், நிர்வாக ரீதியாக 38 மாவட்ட மேலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 17 பேர் துணை மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருப்பவர்கள் மற்றவர்கள் எம்.பி.ஏ. பட்டதாரிகள். சோ.அய்யர்  டாஸ்மாக் மேலாண் இயக்குநராக இருந்தபோது,  முக்கிய பொறுப்பில் பணியாற்றியவர் தான் தற்போது டாஸ்மாக் இணை மேலாண் இயக்குநராக இருக்கும் மோகன். 

டாஸ்மாக் இணை மேலாண் இயக்குநர் என்ற பதவி மோகன் அவர்களுக்காகவே  உருவாக்கப்பட்டது. இதுவரை 10க்கும் மேற்பட்ட துணை மாவட்ட ஆட்சியர் பொறுப்பு டாஸ்மாக் மேலாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார் திரு மோகன் அவர்கள். நெல்லை (சுப்பிரமணியம்) மற்றும் திருச்சி(மணிவேல்) மாவட்ட மேலாளர்களை(துணைமாவட்ட ஆட்சியர்கள்) சஸ்பெண்ட் செய்துள் ளார். இதனால் துணை மாவட்டஆட்சியர்களான டாஸ்மாக் மேலாளர்கள், தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரை சந்தித்து மோகன் மீது புகார் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். ஊழியர்களும் மாத மாமுல் கேட்பதாலேயே கூடுதல்விலை, இருப்புகுறைபாடு போன்ற தவறுகளை செய்வதாக கூறுகின்றனர்.