வெள்ளி, 13 மே, 2016

யூஸ் லெஸ் கைஸ்

(பயனற்ற படுபாவிகள்)

தேர்தல் நேரத்து  அரசியல்வாதிகள் மக்கள் நேசிப்பில் காதல் மன்னன் ஜெமினியையும் மிஞ்சுவார்கள். ஆம் காதலிக்கும் தருணங்களில் காதலியின் கண் அசைவில்  பூலோகத்தினையே புரட்டி போடுவதாக கூறுவர். ஆனால் ஆளுங்கட்சியாக மாறிவிட்டால் அமைதியாய் கணவனின் நிலைக்கு வந்துவிடுவர். மனைவியின் கோரிக்கைகளுக்கு மதிப்பு இருக்காது. இன்னும் தொழிலாளர்கள் போராட்டக் களத்திற்கு வந்துவிட்டால் அப்பப்பா இவர்கள் ருத்ர தாண்டவமே எடுப்பர். சமீபத்திய விளம்பரம் சொல்லும் பசி வந்தால் நீ ஹீரோயினியாக மாறிவிடுவாய் என்பது போல். 


தமிழகத்தில் மதுவிலக்கு போராட்ட கதையும் இப்படி தான். போராட்டங்கள் சசிபெருமாள் மரணம் தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்தும் போராட்டம் வரை அடக்குமுறை தான். தற்பொழுது யார் ஆட்சிக்கு வந்தாலும்  டாஸ்மாக் மூடுவிழா என்கின்றது தமிழக அரசியல்களம். அது சரி இதுவரை டாஸ்மாக்கால் யாருக்கு லாபம்?